உலகம்
அதீத அன்பு காரணமாக விவாகரத்து கேட்கும் பெண்



ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர் தனது விவாகரத்துக்கு கூறிய வினோத காரணம் பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
திருமணமாகி ஒரு ஆண்டு ஆன நிலையில், தன் கணவர் தன்னை அளவுக்கதிகமாக நேசிப்பதால், தன்னுடன் சண்டையே போடுவதில்லை எனவும், தன்னை எதிர்த்து பேசுவதோ, கண்டிப்பதோ இல்லை எனவும் அந்த பெண் தனது விவகாரத்துக்கான காரணத்தை கூறியுள்ளார்.
எப்போது பார்த்தாலும் பரிசு பொருட்களை வாங்கிவந்து வீட்டில் குவிக்கிறார். ஆனால் அவரது இந்த பாசம் எனக்கு நரகமாக இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக எப்போதாவது சண்டை வரும் என நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்காது என எனக்கு தோன்றுகிறது. எனவே எனக்கு விவாகரத்து வழங்குங்கள்” என முறையிட்டுள்ளார்.