இந்தியாலைப் ஸ்டைல்
நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை



மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றை கடந்து செல்லும் வகையில், நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 அடி ஆழத்தில், 520 மீட்டர் தூரத்துக்கு இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.
நீர்கசிவு ஏற்படாமல் இருக்க 3 அடுக்கு தடுப்புகளுடன் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயில் பாதை பணி தற்போது முடிவடைந்துள்ளது.
இப்பாதையில் விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.